Posts

Showing posts from December 15, 2020

ஆன்மீக கஸல்

Image
 நீந்த துடிக்கும்  மீன் குஞ்சு போல் .... இறை ஆசை .....(+) வறண்டிருக்கும் குளம் போல் ...... மனம் ......(-) & ஆன்மீக கஸல் கவிப்புயல் இனியவன் more_horiz on Sun Nov 05, 2017 9:08 pm by கவிப்புயல் இனியவன் ஐம்புலனை .... அடக்கும் ஆமையின் ... ஆற்றல் எனக்கில்லை ...(-) நான் ..... ஆறறிவு மனிதன் (+) & ஆன்மீக கஸல் கவிப்புயல் இனியவன் more_horiz on Sun Nov 05, 2017 9:15 pm by கவிப்புயல் இனியவன் மனதில் இருள் .... கருவறையில் ..... இறைவனுக்கு .... காட்டும் ஒளியில் .... மனம் குளிர்ந்தேன் ....! & ஆன்மீக கஸல் கவிப்புயல் இனியவன் more_horiz on Thu Nov 09, 2017 7:44 pm by கவிப்புயல் இனியவன் இறைவா..... இரண்டு மனம் வேண்டும்..........! உன்மீது பற்றை..... அதிகரிக்க வேண்டும்.... என்மீது பற்றை..... குறைக்கவேண்டும்....! & ஆன்மீக கஸல் கவிப்புயல் இனியவன் more_horiz on Thu Nov 09, 2017 7:58 pm by கவிப்புயல் இனியவன் செவ்வாய்....... கிரகத்துக்கு...... போக துடிக்கும்....... மனம்......... செவ்வாய் கிரகதோஷ..... பெண்ணோடு வாழ...... மறுக்கிறது.......! & ஆன்மீக கஸல் கவிப்புயல் இனியவன்

அன்பே உனக்காக கவிதை

Image
 பேச துடிக்கும் என் உதடு ...... தடுக்கிறது உன் மௌனம் ..... பேசு பேசு என்கிறது மனம் ...... வலி தாங்க தயாராகும் இதயம் ..... பிறக்கிறது ஆயிரம் கவிதை ......! & அன்பே உனக்காக கவிதை கவிப்புயல் இனியவன் more_horiz on Mon Nov 13, 2017 10:20 pm by கவிப்புயல் இனியவன் கனவு இல்லையேல் ..... இரவு அழகில்லை ..... காதல் இல்லையேல் ....... உயிர்களுக்கு அழகில்லை ..... காதலே நீ நீடூடி வாழ்க ...!!! & அன்பே உனக்காக கவிதை கவிப்புயல் இனியவன் more_horiz on Mon Nov 13, 2017 10:33 pm by கவிப்புயல் இனியவன் இதயம் நீ இருக்கும் வரை துடிக்கும் .... கண்கள் உன்னையே பார்க்கும் ............ கால்கள் உன் தெருவுக்கே நடக்கும் ...... எண்ணமெல்லாம் உன்னையே சுற்றும் ... வரிகள் எல்லாம் உன்னையே எழுதும் ....! & அன்பே உனக்காக கவிதை கவிப்புயல் இனியவன்

இதயம் கவரும் கவிதைகள்

Image
 தாயே உன்...... நினைவு போதெல்லாம் இதயம் துடிக்கவில்லை..... இதயம் வெடிக்கிறது...... நரம்புகள் இரத்தத்தை..... கடத்தவில்லை ...... உன் உருவத்தையே இரத்தமாய் கடத்துகிறது ....! இறைவா ........! படைப்பது உன்..... தொழில் என்றால் ....... எனக்காக படைப்பை...... செய்தருளிவீராக....... மீண்டும் என் தாயை...... எனக்கு தாயாக படைத்தருளுவீராக.....! & கவிநாட்டியரசர், கவிப்புயல் கே இனியவன் more_horiz on Thu Dec 07, 2017 9:45 pm by கவிப்புயல் இனியவன் நீ ... ஒருமுறை.... கண் சிமிட்டினால்.... ஓராயிரம் கவிதை.... எழுதுகிறேன்....! ஒரு நொடி ...... பேசாது இருந்தால் ஆயிரம் முறை இறந்து பிறக்கிறேன் ....! உயிரே ...... மௌனத்தால்..... கொல்லாதே ... உன் நினைவால்.... துடிக்கிறேன்.........! & கவிநாட்டியரசர், கவிப்புயல் கே இனியவன் இதயம் கவரும் கவிதைகள் more_horiz on Thu Dec 07, 2017 9:50 pm by கவிப்புயல் இனியவன் காற்றுக்கு வாசனை இல்லை.... நீ வரும் போது..... உணர்கிறேன் காற்றில்..... வாசனையை ....! நீருக்கு ....... நிறம் இல்லை.... நீ ........ நீராடும் போது..... பார்கிறேன் அதன் நிறத்தை .....! ஒரு...... முறை என்னை..... பா

நிலாவே வா

 நிலவே .... உன்னை உவமையாக கூறி .... காதல் செய்தும் காதலரை .... வாழ்த்திட ஒருமுறை வருவாயோ ..? உன்னையே உவமையாக கூறி .... காதலியை ஏமாற்றிய .... காதலனை சுட்டெரிக்க .... ஒருமுறை வருவாயோ ..? நிலவே உன்னிடம் .. நீர் ,நிலம், காற்று இருக்கிறதா ..? தொடரட்டும் விஞ்ஞான ஆய்வு ....! பூலோகத்திலோ உன்னால் ... நீர் ,நிலம், காற்றுமாசடைகிறது ....!!! நிலவே ஒருமுறை வருவாயோ .. சூழலை மாசுபடுத்தும் இவர்களை .... எச்சரிக்க மாட்டாயோ ...? நிலாவில் பாட்டி இருக்கிறார் .... இன்றுவரை நம்பும் குழந்தைகள் ....!!! பாட்டியுமில்லை பாட்டனுமில்லை ... வான் வெளி தூசிகளே அவை .... நிரூபிக்க ஒருமுறை வருவாயோ ...? மூடநம்பிக்கையை உடைத்தெறிய ... ஒருமுறை இறங்கி வருவாயோ

என்னவள் நிலா

 காரிருள் வானத்தில் பளிச்சிடும் நிலாவே .... காரிருள் கூந்தலோடு பளிச்சிடும் .... என்னவளின் வதனமும் ..... மண்ணுலக நிலாதானடி .... விண் நிலவே - நீ தான் .... என்னவளை படைத்தாயோ ....!!! நீ படைத்த என்னவளோ .... தரையில் உலாவரும் முழுநிலா ..... விண் நிலவே வந்துவிடாதே ..... வெட்கப்படுவாய் வேதனை படுவாய் .... மாதமொருமுறை எடுக்கும் ஓய்வை.... மாதம் முழுதும் எடுத்துவிடுவாய்....!!! அண்ணாந்து பார்த்த வெண்ணிலாவை .... அருகில் இருக்கும் அற்புதம் பார்த்தேன் ...... தேய்ந்து வளரும் வெண்ணிலாவை .... தோளோடு சார்ந்திருக்கும் வரமும் பெற்றேன் .... விண்ணுலக வெண்ணிலாவே ..... மண்ணுலக வெண்ணிலாவை ..... என்னவளாக தந்தமைக்கு நன்றி