Posts

Showing posts from December 12, 2020

66) வலிக்கும் இதயம்

வெட்ட வெளியை வேடிக்கை  பார்ப்பதாகிவிட்டது -என் வாழ்க்கை  நான் திரிந்த இடங்கள் திமிர் கொண்டு நடந்த இடங்கள் என் உறவுகள் நடந்த இடங்கள்  எங்களையார் கேட்பார்கள்  என்று வீராப்புடன் திரிந்த இடங்கள்  இப்போ வெட்ட வெளியாக இருக்கிறது    வெட்ட வெளியை வேடிக்கை  பார்ப்பதாகிவிட்டது -என் வாழ்க்கை

65) வலிக்கும் இதயம்

  காதல் ... இதயத்தில் வளரும் ... தேன் கூடு .....!!! சின்ன சின்ன .... நினைவுகளால் .... கனவுகளால் .... கட்டப்படும் தேன் கூடு ....!!! யார் நம் காதலை .... கலைத்து விட்டது ...? காதலரே காதல் தேன் .... கூட்டில் கல்லெறிய  அனுமதிக்காதீர் ....!!! கல்லெறி வாங்கியவன் ... கண்ணீரோடு சொல்கிறேன் .... காதல் ஒரு சாம்ராச்சியம் .... இன்னொருவரை அனுமதிக்காதீர் ....!!! + கே இனியவன்  வலிக்கும் இதயத்தின் கவிதை

62-63) வலிக்கும் இதயம்

Image
on Thu 8 Oct 2015 - 17:40 by  கவிப்புயல் இனியவன் கூலி வேலை செய்தேன் உன் வீட்டில்  யார் கண்டது நீ  கண்ணில் படுயென்று ...? கூலிக்கும் உன்மீது ஆசை ..... உனக்கும் என்மீது ஆசை ... கூடி ஒருநாள்கூட போசமுடியாத - தினக்கூலினான் ....!!! வீட்டுவேலை முடிந்ததும்.... முடிந்தது என் காதல் .... கண்ணே முடியவில்லை ... உன் நினைவுகளை மறக்க .... முடியவில்லை யாருக்கும் சொல்ல ....? .  கூலிக்கு தேவையா?  இந்தக்காதல் என்பார்கள் . ... கூலிக்கும் இதயம் இருக்கு .... என்று ஏன் புரிவதில்லை .... இந்த உலகத்துக்கு .... கூலிக்கும் காதல் வரும் -என்று  இன்னுமொரு கூலிக்கு புரிந்தால்.... என் காதலுக்கு உயிர் இருக்கும் ...!!! thumb_up Like thumb_down Dislike on Thu 8 Oct 2015 - 17:49 by  கவிப்புயல் இனியவன் வெட்ட வெளியை வேடிக்கை  பார்ப்பதாகிவிட்டது -என் வாழ்க்கை  நான் திரிந்த இடங்கள் திமிர் கொண்டு நடந்த இடங்கள் என் உறவுகள் நடந்த இடங்கள்  எங்களையார் கேட்பார்கள்  என்று வீராப்புடன் திரிந்த இடங்கள்  இப்போ வெட்ட வெளியாக இருக்கிறது    வெட்ட வெளியை வேடிக்கை  பார்ப்பதாகிவிட்டது -என் வாழ்க்கை

53-61) வலிக்கும் இதயம்

Image
  உயிரே .... நான் எழுதிய கவிதைகளை .... கவனமாக சேர்த்துவை ..... அடுத்த ஜென்மத்திலும் .... நீதான் என் காதலி ......!!! என் கவிதையூடாக .... என் விதியை மாற்றி .... எழுதிக்கொண்டிருக்கிறேன் .... அடுத்த ஜென்மத்திலும் நாம்  காதலறாய் பிறப்போம் ....!!! + + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  வலிக்கும் இதயத்தின் கவிதை thumb_up Like thumb_down Dislike on Wed 9 Sep 2015 - 7:59 by  கவிப்புயல் இனியவன் நீ  என்னுள் விதைக்கும் ... ஒவ்வொரு எண்ணங்கள் ... என்னும் விதைதான் ... என் கவிதை என்னும் .... அறுவடை .....!!! என் மனம் .... தரிசு நிலமானாலும் ..... வரண்ட பயிரென்றாலும் .... உன் நினைவால் வளரும் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  வலிக்கும் இதயத்தின் கவிதை thumb_up Like thumb_down Dislike on Tue 22 Sep 2015 - 15:05 by  கவிப்புயல் இனியவன் வாழ்வில் நான் மனமுடைந்த பொழுதுகளில் என்னை அணைத்து என் வலிகளை எரித்தவள் - நீ நான் தடுமாறிய தருணங்களில் என் தலையைத்தடவி தன்னம்பிக்கை தந்தவள் - நீ உனக்கெனக்கொடுக்க உண்மைக்காதலும் என் உயிரும் மட்டுமே உள்ளது என்னிடம் .....! நீ எதுவும் தர முடிந்தால் .... உள்ளத்தால் உண்மையான

52) வலிக்கும் இதயம்

  இறைவனின் படைப்பில் .... உன்னத படைப்பு - நீ ..... இறைவனின் கிடைப்பனவில் .... உன்னத கிடைப்பனவு -கனவு ....!!! நீ எனக்கு  இல்லை என்றாகிவிட்டது..... இதற்காக இறைவனை .... நிந்திக்க மாட்டேன் ....! உன் நினைவோடும்  கனவோடும் கல்லறை வரை  இனிமையோடு களிப்பேன் ....!!!  + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  வலிக்கும் இதயத்தின் கவிதை