Posts

Showing posts from December 11, 2020

4) வலிக்கும் இதயத்தின் கவிதை

  என்  இதயத்தை கேட்டுப்பார் உன் நினைவுகளை தாங்காமல் துடிக்கும் துடிப்பை .....!!! காதல் நரம்பில் வந்த இன்ப இசையில் சோககீதம் பாடவைத்தாய்..... எப்படியோ என்னுடன் நீ இருப்பாய் என்ற ஆசையுடன் வாழ்ந்தேன் ....!!! என் ஒவ்வொரு இதய நரம்பையும் அறுத்துவிட்டு காதல் வீணையில் ஓசை இல்லை என்கிறாயே

3) வலிக்கும் இதயத்தின் கவிதை

  அந்த நிமிடம் வரை வலியில்லை இந்த நிமிடம் வரை வலியில்லாமல் இருந்ததில்லை .... உன்னை காதலித்ததால் ....!!! இதயத்தில் என் ஒவ்வொரு நரம்பையும் முற்களாக மாற்றியவள் -நீ என் இதயம் ஈரமாக இருப்பதால் காத்திருக்கிறேன் முற் செடியில் மலர் வரலாம் என்ற சின்ன ஆசையுடன்

2) வலிக்கும் இதயத்தின் கவிதை

நான்  எங்கே தனிமையில்  இருந்தேன் -உன்  நினைவின் வலிகளுடன்  தானே வாழுகிறேன் ...!!! உன்  மடியை  ஒருமுறை  கொடு தூங்க அல்ல  என் மூச்சை விட ....!!! தூங்கியதே இல்லை  கண்ணீருடன் இருக்கும்  கண்கள் தூங்குவதோ... !!!

1) வலிக்கும் இதயத்தின் கவிதை

  கொஞ்சம் கொஞ்சமாக  மறந்து வருகிறேன்  உன் முகத்தை ...!!! மறக்க மறக்க  ஊற்றாய் வருகிறது  உன் நினைவுகள் ...!!! காதல் என்றால்  வலி இருக்கலாம்  வலியே காதலாக  இருக்குதடி என் வாழ்வில் @ கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை