Skip to main content

53-61) வலிக்கும் இதயம்

 உயிரே ....

நான் எழுதிய கவிதைகளை ....
கவனமாக சேர்த்துவை .....
அடுத்த ஜென்மத்திலும் ....
நீதான் என் காதலி ......!!!

என் கவிதையூடாக ....
என் விதியை மாற்றி ....
எழுதிக்கொண்டிருக்கிறேன் ....
அடுத்த ஜென்மத்திலும் நாம் 
காதலறாய் பிறப்போம் ....!!!
+
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
நீ 
என்னுள் விதைக்கும் ...
ஒவ்வொரு எண்ணங்கள் ...
என்னும் விதைதான் ...
என் கவிதை என்னும் ....
அறுவடை .....!!!

என் மனம் ....
தரிசு நிலமானாலும் .....
வரண்ட பயிரென்றாலும் ....
உன் நினைவால் வளரும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
வாழ்வில் நான்
மனமுடைந்த பொழுதுகளில்
என்னை அணைத்து என்
வலிகளை எரித்தவள் - நீ

நான்
தடுமாறிய தருணங்களில் என்
தலையைத்தடவி
தன்னம்பிக்கை தந்தவள் - நீ

உனக்கெனக்கொடுக்க
உண்மைக்காதலும் என்
உயிரும் மட்டுமே
உள்ளது என்னிடம் .....!
நீ எதுவும் தர முடிந்தால் ....
உள்ளத்தால் உண்மையான ...
காதலை தந்துவிடு ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
நீ 
தூக்கி எறிந்த -என் இதயம்
துடித்துக்கொண்டு இருக்கிறது ....
சிதறு தேங்காய் போல் ....
சிதறிக்கிடந்தாலும் .....
இன்னும் இறக்காமல் .....
துடித்துக்கொண்டே இருக்கிறது ....!!!


நீ தூக்கி எறிந்த ....
உன் நினைவுகளும்....
என் நினைவுகளோடு.... 
சேர்ந்து அழுதுகொண்டே ....
இருக்கிறதடி ......!!!

என் 
நரம்புகள் துடி துடித்து 
சாகுதடி ....!
என் நரம்புகளில்....
நகர் வலம் வரும்.....
உன் நினவகளுடன் ....
கலந்த என் நினைவுகளும் ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
பகல் நேர நிலவு
இரவு நேர சூரியன்

நீரற்ற அருவி
இசையற்ற காடு

இவையெல்லாம் 
ரசிக்கபடுவதில்லையோ
அவ்வாறே..
நீயில்லாத நான்.. .....!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
நான் பழகுவதற்கு
எத்தனையோ மனங்கள் ....
இருக்கலாம் - ஆனால் 
நான் மனம் விட்டு பேச .....
உன்னைவிட்டால் யார் ...?

காதல் கண்ணில் தோன்றி ....
கண்ணில் மறைபவர்களுக்கு ....
காண்பதெல்லாம் காதல் .....
என் இதயத்தில் தோன்றி ....
என் இதயம் வரை இருக்கும் ....
பாக்கியம் உன்னைவிட்டால் யார் ...?

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கண்களால் ஜாடைசெய்தால் ...
காதலில் தவிர்க்க விட்டாள் ....
காதலின் வலியென்ன ...?
கண்ணீரால் பதில் சொல்கிறாள் ....!!!

அவளின் இதயம் என்னிடத்தில் 
அவள் எப்படி உயிர் வாழ்கிறாளோ ....?
நான் வாழ்கிறேனே  ......
என் இதயம் அவளிடம் ...!!!

நான்  கல்லறையில் இருக்கிறேன்
அவளின் கல்லறையை எதிர்க்கிறேன்..
வேண்டாம் வேண்டாம் அவள் வேண்டாம் ...
அவளாவது வாழட்டும்  காதலோடு ....
எனக்கும் சேர்த்து சில காலம் ..............!
கவிப்புயல் இனியவன்
நீ என்னை பார்த்து ......
சிரித்த நாட்களைவிட ..
நான் உன்னை நினைத்து 
அழுத நாட்கள் தான் அதிகம் ..!!!

காதலில் வலி இல்லை ...
காதலில் வலி  சுகம் ...
காதலில் வலியும் சோகமும் ....
காதலின் அசையா சொத்துகள் ....!!!

நம் காதலை சிந்தித்த ....
கணப்பொழுதை காட்டிலும் ....
கண்ணீர் சிந்திய கணப்பொழுது ....
அதிகரித்துக்கொண்டே செல்கிறதே ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
விடலை பருவத்தில் 
குடிக்கும் விஷம் ...
காதல் விஷம் ....!!!

மெல்ல கொல்லும்...
மனிதனை காதலும் ....
சோதிடமும் ....!!!

உடனே கொல்லும் ....
அவளின் மௌனமும் ....
பாராமுகமும்

Comments

வருட பிரபல கவிதை

தேனிலும் இனியது காதலே 23

89-100) வலிக்கும் இதயம்

ஐந்து வரி கவிதைகள் 17

முள்ளில் மலரும் பூக்கள்(60)

முள்ளில் மலரும் பூக்கள்(62)

பஞ்ச வர்ண கவிதைகள்

7- 13) வலிக்கும் இதயம்

உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள்