Skip to main content

7- 13) வலிக்கும் இதயம்

 நீ 

உதட்டால் 
பேசிய வார்த்தையை 
நான் காதல் என்று 
தப்பாக புரிந்து விட்டேன் ....!!!

உதடும் இதயமும் 
காதலிப்பது ,,,,,
தண்ணீரும்  எண்ணையும்...
காதலிப்பது போல் ....!!!

உன் வீட்டோரம் நான் 
நடந்த பாதைக்கு என் 
பெயரை கூட வைக்கலாம் 
பாதைக்கு தெரியும் என் வலி ....!!!
+
+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
நான் 
நிஜமாக காதலித்தேன் 
நீ 
நிழலாக காதலித்திருக்கிறாய் .....!!!

நிஜமாக காதலித்த என்னை 
ஏனடி நிராகரித்தாய் ...?
உனக்கு மாயை காதல் 
பிடிக்குமோ ....?

உன்னை காதலித்ததால் 
என் நிம்மதி  தொலைந்து 
விட்டது - என்றாலும் 
என் காதல் தொலையவில்லை 
அதுவரை நான் காதலிப்பேன் ...!!!
+
+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
நீ தூரத்தில் வரும்
போதெல்லாம் துள்ளி ...
குதித்த இதயம் -இப்போ
நீ அருகில் வரும் போதே ..
என்னை கிள்ளுது அவளை ...
பார்க்காதே என்று ....!!!

வலியை தாங்கிய ...
இதயத்துக்கு தானே ...
நீ தந்த வலியின்  வலி 
தெரியும்  ......!!!
+
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
காதலில் 
உதட்டால் இன்பம்  தந்து ...
இதயத்தில் வலிதருவதே ...
வழமை ....!!!

நீ ஏனடி ...
இதயத்தில் இன்பம் தந்து 
உதட்டால் வலிகளை
தந்துகொண்டிருக்கிறாய் ...!!!
கவிப்புயல் இனியவன்
என் இதயத்தை ...
எங்கு என்றாலும் வீசி விடு ...
என் கவிதையை வீசி விடாதே ...!!!
கவிதை எனக்கு பேச்சு அல்ல 
அது என் மூச்சு ....!!!

காதல் 
கண்ணில் ஆரம்பிக்கும்....
அது மாயையாய் மாறலாம் ...
கவிதை உணர்வால் வரும் ...
என்றும் என்னோடு இணைந்து ...
கொண்டே இருக்கும் ...!!!
கவிப்புயல் இனியவன்
உன்னை காதலித்து ...
உறவை பெற்று ...
கொள்வதற்காக   ....
எத்தனை உறவை ...
தொலைத்து விட்டேன் ....!!!

இப்போ 
உன் உறவும் இல்லை....
எந்த உறவும் இல்லை ... 
வலிக்குது  இதயம் மட்டும் ...
அல்ல என் உயிரும் தான் ...!!!
+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Comments

வருட பிரபல கவிதை

தேனிலும் இனியது காதலே 23

89-100) வலிக்கும் இதயம்

ஐந்து வரி கவிதைகள் 17

முள்ளில் மலரும் பூக்கள்(60)

முள்ளில் மலரும் பூக்கள்(62)

பஞ்ச வர்ண கவிதைகள்

உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள்