Skip to main content

காதல் அணுக்கவிதை

 நீ ................

காதலோடு பார்கிறாய்....
என்ன செய்வது எனக்கு......
உன்மேல் காதல் செய்ய....
கடந்த காதல் தந்த காயம்....
தடுக்கிறதே......!

@
கவிப்புயல் இனியவன்
சின்னச் சின்ன அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
சுற்றி சுற்றி வருகிறேன்
கொத்தி கொத்தி கலைக்கிறாய்
காதல் செத்து செத்து பிழைக்கிறது ,,,,!

@

காதலி உள்ளம் சுத்தமாகும்....
கவிதை எழுது எண்ணம் சுத்தமாகும்.....
இரண்டும் செய் வாழ்கை வளமாகும்...!

@
கவிப்புயல் இனியவன்
சின்னச் சின்ன அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
இதயத்தில் முள்....
கண்ணில் மலர்....
காதல் பலாப்பழம்...
அனுபவித்தால்....
இனிக்கும்.....!

@
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நான் தூரத்தில்.......
இருப்பதுதான் உனக்கு....
சந்தோசம் என்றால்.....
தூரவே இருந்து விடுகிறேன்....
உன் அருகிலிருந்த ......
நினைவுகலோடு....!

@
நெஞ்சை கிள்ளும் நினைவோடு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
முகத்தில் ரோஜாவையும்
இதயத்தில் முள்ளையும்
வைத்து காதலிக்கிறாய்
நான் ஏற்கிறேன்.....
காதல் பித்தனில்லை....
காதல் புத்தன்.....!

@
நெஞ்சை கிள்ளும் நினைவோடு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
உன் முகம் பார்க்க.....
ஏங்கி ஓரகண்ணால்...
கண்ணீர் வடிக்கிறேன்.....
உனக்கு அது சிறு துளி.....
எனக்கு இதயத்தின்.....
மொத்த வலி.......!

@
நெஞ்சை கிள்ளும் நினைவோடு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நெருப்பில் கருகியவர்கள்
பலர் உன் சிரிப்பில்
கருகியவன் நான் தான் ...!!!

<3

மன காயப்படும் கூட‌
ஆறுதல் சொல்ல‌ நீ
வருவாய் என்று ஏங்குது
சொற‌ணை கெட்ட‌
என் இதயம்....!

<3

இதயம்
துடிக்க‌ காற்று
தேவையில்லை
காதல் போதும் ...!

<3

நீ காதல் கொண்டு
பார்க்கிறாய் -என்ன
செய்வது உன்னில்
காதல் வரமாட்டேன்
என்கிறதே .....!

<3

நாம் காதலர்
என்று சொன்னால்
யாரும் நம்புவதில்லை
நம்பும் படியாக நீ
மாறவில்லை ....!!!

<3

ஒன்றில் நீ பேசு
அல்லது உன் கண்
பேசட்டும் இரண்டும்
பேசினால் நான் எப்படி
பேசுவது ...?

<3

அவளுக்கு இதயம்
இருக்கும் இடத்தில்
முள் கம்பிகள் இருக்கிறது
போல் இப்படி வலி தருகிறாள் ..?

<3

உன்
சின்ன சிரிப்பு போதும்
என் நெஞ்சில் இருக்கும்
வலியை உடைத்தெறிய ....!!!

<3

நான் எழுதுவது உனக்கு
ஒருவரி கவிதை - அது
என் இதய வலி கவிதை

<3

நான் தற்கொலை செய்ய
மாட்டேன் - நீதான் என்னை
தினமும் கொல்கிறாயே...!!!

@@@@@
கவிப்புயல் இனியவன்
சின்னச் சின்ன அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
என்னை .....
விரும்பு என்று ....
கெஞ்ச மாட்டேன் ....
என்னை விரும்பாத ...
வரை விட மாட்டேன் ....

<3

உலகில் .....
பெரிய சித்திர வதை ....
பேசிய ஒரு உள்ளம் ....
பேசாமல் இருப்பது தான் ......
உலகில் பெரிய குற்றம் .....
காதல் செய்யாமல் ....
காதலிப்பது போல்....
நடிப்பது தான் ....!

<3

எத்தனை உள்ளங்கள் ...
கெஞ்சி கேட்டாலும் ....
தனிப்பட்ட கவிதை ...
யாருக்கும் இல்லை ....
உயிரே எத்தனை கவிதை ....
எழுதினாலும் உனக்கு....
தவிர யாருக்கும் இல்லை.....!

<3

என்னை .....
காதலால் சித்திர வதை....
செய்கிறாள் ....
கண்களால் கைது செய்தவள் ....
நினைவு என்னும் ....
சிறைச்சாலையில் ....
தினம் வாடி துடிக்கிறேன்......!

<3

உனக்காக....
எதையும் இழப்பேன் ....
என்னவள்.....
என்னை இழந்து நிற்கிறாள் ....
எனக்காக எதையும் ....
வைத்திருக்காத நான் ....
எல்லாவற்றையும் ...
இழந்து நிற்கிறேன் .......!!!

@@@@@
கவிப்புயல் இனியவன்
சின்னச் சின்ன அணுக்கவிதை - 02

Comments

வருட பிரபல கவிதை

தேனிலும் இனியது காதலே 23

89-100) வலிக்கும் இதயம்

ஐந்து வரி கவிதைகள் 17

முள்ளில் மலரும் பூக்கள்(60)

முள்ளில் மலரும் பூக்கள்(62)

பஞ்ச வர்ண கவிதைகள்

7- 13) வலிக்கும் இதயம்

உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள்