Skip to main content

ஐந்து வரி கவிதைகள் 33

 கவிப்புயல் இனியவன்

என்னவளே உறக்கத்தை
தொலைக்கும் அளவுக்கு ....
நினைவுகளை தந்துவிட்டு .....
கனவில் இன்று வருவேன் ...
காத்திரு என்கிறாயே .....!!!

+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 18
    கவிப்புயல் இனியவன்
    சிரித்து சிரித்து பேசியவள் ....
    மற்றவர்கள் சிரிக்கும் படி .....
    வைத்துவிட்டாள்.....!!!
    நான் அழகில்லை தான் ...
    நீ அழகாக இருப்பதால் ....!!!

    +
    ஐந்து வரி கவிதைகள் ......!!!
    காதல்கவிதை
    கவிதை எண் 19
      கவிப்புயல் இனியவன்
      நீ காரணத்தோடு பிரிந்தாலும் .....
      நான் காலமெல்லாம் காதலிப்பேன் ....
      எப்படியும் வாழ்வது உன் புத்தி ....
      உன்னோடே வாழ்வது என் பக்தி ....
      தனியே இருந்தாலும் நினைவில் -நீ

      +
      ஐந்து வரி கவிதைகள் ......!!!
      காதல்கவிதை
      கவிதை எண் 20
        கவிப்புயல் இனியவன்
        கண்ணால் தோன்றிய காதலுக்கு .....
        கண்ணுறு பட்டுவிட்டது .....
        கண்ணுக்கு தெரியாத காதலுக்கு ....
        கனவு தான் மிஞ்சியது .....
        காதல் பிரியாத புதிராய் ....!!!

        +
        ஐந்து வரி கவிதைகள் ......!!!
        காதல்கவிதை
        கவிதை எண் 21
          கவிப்புயல் இனியவன்
          இரும்பை காந்தம் கவரும் .....
          எறும்பை கரும்பு கவரும் .....
          காரணம் இல்லாமல் பேசினேன் .....
          காதலிக்கிறாயா ...?
          கண்டுபிடித்துவிட்டான் நண்பன் ....!!!

          +
          ஐந்து வரி கவிதைகள் ......!!!
          காதல்கவிதை
          கவிதை எண் 22
            கவிப்புயல் இனியவன்
            எதிர் பார்க்கும் விடயங்கள் ....
            என்னிடம் எள்ளளவேனும் .....
            இல்லாமல் இருக்கலாம் ....
            எதிர்பார்க்காத அளவு ....
            காதல் உண்டு காதல் செய் ...!!!

            +
            ஐந்து வரி கவிதைகள் ......!!!
            காதல்கவிதை
            கவிதை எண் 23
              கவிப்புயல் இனியவன்
              நீயும் நானும் பிரிந்துவிட்டோம் ....
              எமக்காக ஊரே கண்ணீர் விடுகிறது ....
              பெற்றோர்பன்னீர் தெளிக்கிறார்கள் .....
              இரண்டு இதயங்களை சேர்த்துவைக்க ...
              விரும்பிய இதயத்தை சேர்த்துவையுங்கள் .....!!!

              +
              கே இனியவன்
              ஐந்து வரி கவிதைகள் ......!!!
                கவிப்புயல் இனியவன்
                உனக்காக துடித்த இதயம் ....
                உன்னையே பார்த்த கண்கள் ....
                உனக்காகவே நடந்த கால்கள் ....
                உனக்காகவே பேசிய வார்த்தைகள் ....
                உனக்காகவே இறக்க இருக்கும் உயிர் ....!!!

                +
                கவிப்புயல் இனியவன்
                ஈழக் கவிஞன்
                ஐந்து வரி கவிதைகள் ......!!!
                  கவிப்புயல் இனியவன்
                  என் கவிதை அழகுஎன்றாய் ....
                  என் குரல் இனிமை என்றாய் ....
                  என் கண் அழகு என்றாய்....
                  என் நடை அழகு என்றாய் ....
                  என் காதல் எப்படி அழகில்லை ...?

                  +
                  கவிப்புயல் இனியவன்
                  ஈழக் கவிஞன்
                  ஐந்து வரி கவிதைகள் ......!!!
                    கவிப்புயல் இனியவன்
                    உன்னை நினைக்கும் போதெல்லாம் ....
                    பன்னீராய் மணக்கும் நினைவுகள் ....
                    உன் பிரிவை நினைக்கும் போது ....
                    வெந்நீராய் கொதிக்கிறது .....
                    கண்ணீரால் சமன் செய்வேன் ....!!!

                    +
                    கவிப்புயல் இனியவன்
                    ஈழக் கவிஞன்
                    ஐந்து வரி கவிதைகள் ......!!!
                      செந்தில்
                      கவிதை நன்று அண்ணா
                        கவிப்புயல் இனியவன்
                        கவிதை நன்று அண்ணா

                        நன்றி நன்றி
                          ஸ்ரீராம்
                          @கவிப்புயல் இனியவன் wrote:
                          என் கவிதை அழகுஎன்றாய் ....
                          என் குரல் இனிமை என்றாய் ....
                          என் கண் அழகு என்றாய்....
                          என் நடை அழகு என்றாய் ....
                          என் காதல் எப்படி அழகில்லை ...?

                          +
                          கவிப்புயல் இனியவன்
                          ஈழக் கவிஞன்
                          ஐந்து வரி கவிதைகள் ......!!!

                          நியாயமான ஆதங்கம்தான்.

                          கவிதை அருமை அண்ணா.

                          கவிப்புயல் இனியவன் கவிதைகள் - ஐந்து வரி கவிதைகள் ......!!! - Page 2 VScWx5Q2RUGpUEZ1TVEB+special-post

                          #spoct15-1
                            கவிப்புயல் இனியவன்
                            நியாயமான ஆதங்கம்தான்.

                            கவிதை அருமை அண்ணா.



                            நன்றி நன்றி
                              முரளிராஜா
                              @கவிப்புயல் இனியவன் wrote:
                              உன்னை நினைக்கும் போதெல்லாம் ....
                              பன்னீராய் மணக்கும்  நினைவுகள் ....
                              உன் பிரிவை நினைக்கும் போது ....
                              வெந்நீராய் கொதிக்கிறது .....
                              கண்ணீரால் சமன் செய்வேன் ....!!!

                              +
                              கவிப்புயல் இனியவன்
                              ஈழக் கவிஞன்
                              ஐந்து வரி கவிதைகள் ......!!!
                              அருமை
                                கவிப்புயல் இனியவன்
                                அருமை

                                நன்றி நன்றி
                                  கவிப்புயல் இனியவன்
                                  அதிகமாக நம்பினேன் ....
                                  அளவுக்கு மீறி அன்புகொண்டேன் .....
                                  அகிலத்தையே மறந்தேன் ....
                                  ஆதரவற்று நிற்கிறேன் ....
                                  அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு ....!!!

                                  +
                                  கவிப்புயல் இனியவன்
                                  ஐந்து வரி கவிதைகள் ......!!!
                                  கவிதை எண் 29
                                    கவிப்புயல் இனியவன்
                                    பார்வையில் நெருப்பாய் இருந்தாள்....
                                    பேசுவதில் தீயாய் இருந்தாள் ....
                                    கற்பில் தீ பிழம்பாய் இருந்தாள் ....
                                    அன்பில் அழகான சுடராய் இருந்தாள் ....
                                    காதலால் என்னை கருக்கி விட்டாள்....!!!

                                    +
                                    கவிப்புயல் இனியவன்
                                    ஐந்து வரி கவிதைகள் ......!!!
                                    கவிதை எண் 30
                                      கவிப்புயல் இனியவன்
                                      உன்னை பிரிந்து பலகாலம் ....
                                      உன் முகம் புகைப்படமாய் .....
                                      உன் நினைவுகள் திரைப்படமாய் ....
                                      உன் கனவுகள் ஒளிதிரையாய்....
                                      வந்துகொண்டே இருக்குதடி ....!!!

                                      +
                                      கவிப்புயல் இனியவன்
                                      ஐந்து வரி கவிதைகள் ......!!!
                                      கவிதை எண் 31
                                        கவிப்புயல் இனியவன்
                                        என்னவள் கோபப்பட்டாள்...
                                        என் கோபத்தை விட்டேன் ....
                                        என்னவள் ஆசைபட்டாள்....
                                        என் ஆசைகளை விட்டேன் ....
                                        காதலையும் விட்டுவிட்டேன் ...!!!

                                        +
                                        கவிப்புயல் இனியவன்
                                        ஐந்து வரி கவிதைகள் ......!!!
                                        கவிதை எண் 32
                                          கவிப்புயல் இனியவன்
                                          கண்ணீர்த்துளிகள் உனக்கு ....
                                          முத்துக்களாய் தெரிகிறது .....
                                          கண்கள் ஆழ்கடலாய் தெரிகிறது ....
                                          எதற்காக இதயத்தை பறிக்கிறாய் ....
                                          நானே உனக்கு சிறந்த காதலன் ....!!!

                                          +
                                          கவிப்புயல் இனியவன்
                                          ஐந்து வரி கவிதைகள் ......!!!
                                          கவிதை எண் 33
                                            கவிப்புயல் இனியவன்
                                            நீ அமைதியாக இருந்து ...
                                            எனக்கு சமாதி கட்டுகிறாய் ....
                                            நான் சமாதியாக இருந்தே ....
                                            அமைதி குலைகிறேன்.....
                                            உன் நினைவுகளே ஆறுதல் .....!!!

                                            +
                                            கவிப்புயல் இனியவன்
                                            ஐந்து வரி கவிதைகள் ......!!!
                                            கவிதை எண் 34

                                              Comments

                                              வருட பிரபல கவிதை

                                              தேனிலும் இனியது காதலே 23

                                              89-100) வலிக்கும் இதயம்

                                              ஐந்து வரி கவிதைகள் 17

                                              முள்ளில் மலரும் பூக்கள்(60)

                                              முள்ளில் மலரும் பூக்கள்(62)

                                              பஞ்ச வர்ண கவிதைகள்

                                              7- 13) வலிக்கும் இதயம்

                                              உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள்