Skip to main content

156--177) வலிக்கும் இதயம்

 என்னவளே ......

உயிரற்ற ஓவியமாக்கி ......
உணர்வற்ற உடலாக்கி ......
செயலாற்ற மனிதனாகி ....
உன்னால் அலைகிறேன்....!!!

மற்றவர்கள் என்னை .....
காதல் பைத்தியம் ....
என்கிறார்கள் ....
சொல்லிவிட்டு போகட்டும் ......
நீ அப்படி நினைத்து விடாதே .....!!!

முடிந்தால் எனக்கு ...
ஒரே ஒரு உதவி செய் .....
எனக்காக ஒரு துளி .....
கண்ணீர் விடு ......
அதை விட எனக்கு ......
உன்னிடம் இருந்து வர .....
ஒன்றுமில்லை ..........!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
உன்னை மறப்பதற்கு .......
என்னை மறக்கவேண்டும் .....
என்னை மறப்பதற்கு .....
உன்னை மறக்க வேண்டும் ......
என்ன சொல்கிறேன் என்று .....
புரியவில்லையா ......?
எனக்கும் புரியவில்லை .....
உன்னை எப்படி மறப்பது ....?

முடிந்தால் ஒரு உதவி செய் .....
என்னை நீ மறக்க என்ன .....
செய்தாய் ...? சொல் உன்னை .....
மறக்க நான் முயற்சிக்கிறேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
நீ ...
எனக்கு ...
கிடைக்க போவதில்லை .....
உறுத்தியாகி விட்டது .....
அறுதியான நம் காதல் .....!!!

என்னதான் ......
சொன்னாலும் .....
உன்னை கண்டவுடன் .....
பாழாய் போன மனசு ......
உன்னுடன் பேச துடிக்கிறது .....
அற்ப ஆசையுடன் .....
ஏங்குகிறது .........................!!!

+
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கலைந்தே ....
போனாலும்.....
மறப்பதில்லை...
நீ வந்துபோன....
கனவுகள். . !

நீ 
பிரிந்தே போனாலும்.....
விழியோரம் கலையாமல்....
நீ தந்த நினைவின் ....
வலிகள் ........!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
உன்.... 
நினைவு இல்லாத ....
தேசம் எது சொல் ......
அங்கே சென்று ....
விடுகிறேன்..............!!!

உன் ....
நினைவுகளின் ...
வலியை .......
என் இதயத்தால்
சுமந்து கொண்டு ....
உன் முன்னே .....
வாழ முடியவில்லை .....!!!
கவிப்புயல் இனியவன்
நீ 
உண்மையோ ....
பொய்யோ....
பேசினாலும் .....
ரசிப்பேன் ......!!!

எத்தனை ...
முறை அடித்தாலும்...
தாய்மடித் தேடும் ...
பிள்ளையாய்...
உன்னை மட்டுமே ...
தேடுவேன்...
உயிர் உள்ள வரை,....!!!

நீ 
பார்வையில் இருந்து 
விலகி செல்லும் ....
போதெல்லாம் ....
கண்களுடன் .......
போராடுகின்றது,..
கண்ணீர் .....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பெற்ற .....
தாயின் இழப்பு ...
ஒருபுறம் கண்ணீரை ....
கொண்டு வருகிறது ...!!!

நீ பிரிந்து சென்ற ..
வலி கண்ணீரை ..
தருகிறது ...!!!
இரண்டையும் இரு ..
கண்களாக விரும்பினேன் ..
என்பதற்காக ...
என் இரண்டு கண்ணும் ..
அழுகிறது ..!!!

நிச்சயம் சொல்வேன் ...
வரும் துளிகளில் ...
ஒருதுளி நீ ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நீதான் என் வாழ்வு....
நீதான் என் காதல்....
நீதான் என் சந்தோசம்....
நீதான் என் சோகம்....
நீயின்றி போனால் .....
வாழ்வில்லை.......
என்றிருந்தேன்...!!!

இப்போ ....???
குரல் கேட்க ஆசை தான்..
ஏனோ கேட்க மறுக்கிறேன்....
முகம் பார்க்க ஆசை தான் ..
ஏனோ பார்க்க மறுக்கிறேன்..
உன்னுடன் பேச ஆசை தான்..
ஏனோ பேச மறுக்கிறேன்...
அத்தனை வலிகளை தந்து ....
மனதில் இரக்கத்தையே .....
கொன்று விட்டாய் ...........!!!

+
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
இறைவா ....
அவள் இல்லாத.....
விடியல் வேண்டாம்.......
அவள் இல்லாத ....
உயிரும் வேண்டாம்.....!!!

என்னுள் இருக்கும்...!
அவள் இதயத்தை .....
மட்டும் துடிக்க விட்டு
என் உயிரை பறித்து விடு .....!!!

+
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
நீ 
செய்யும் கொலைகளும் ...
கொள்ளைகளும்...
எந்தப்பத்திரிகையிலும் ...
வருவதில்லை ...!!!

தினமும் என்னை ......
சித்திரைவதை செய்கிறாய் ...
இதயத்தை கொள்ளையடித்தாய் ...

பேசாமல் இருந்து 
கொலையும் செய்கிறாய் ...!
உன் பத்திரிக்கை சுதந்திரம் .....
பாசிச அரசோ ...?

+
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
நீ 
என்னை மறந்ததை ....
நினைத்து கவலைப்படவில்லை .....
நீ மறந்து விட்டாய் என்று ....
பல முறை இதயத்துக்கு ....
சொல்லி விட்டேன் .....
இன்னும் இதயக்கதவை ......
திறந்து காத்துக்கொண்டு ....
இருக்கிறது ..............!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
முடியவில்லை ......
பிரிவை தாங்க
முடியவில்லை ......!!!

தெரியவில்லை ....
வேறுமுகம் எனக்கு....
தெரியவில்லை.....!!!

பிரியவில்லை ....
மனத்தால் நாம்...
பிரியவில்லை...!!!

புரியவில்லை நீ ....
ஏன் வெறுத்தாய் என்று ..
புரியவில்லை ...!!!

நம்புகிறேன் .....
மீண்டும் வருவாய் என்று ..
நம்புகிறேன் ...!!!

&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கல்லூரியின் கடைசிநாள் ....
உன் பயணப்பொதியை....
தம்பி ஓடிவந்து தூக்கிறான்.....!!!

உன் அருகே இருந்துவர ..
உன் அம்மா இருக்கையை ....
சரிசெய்கிறார் .....!!!

இறங்கும் இடத்தில் ...
வரவேற்க உன் உறவினர் ...!!!

உன்னை அனுப்பிவிட்டு ....
நான் மட்டும் அனாதையாக ...
தனியே திரும்புகிறேன் ......!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
உன் தொலைபேசி ...
அழைப்பு என்னை .....
சந்தேகிக்கவைக்கிறது ....???

என்னை .....
மறந்து விடு என்று ..
சொல்லியபின் மௌனமானாய் ...
அப்படிஎன்றால் நீ அழுகிறாய் ....!!!

உலகில் எந்த காதலர்கள் ..
அழாமல் காதலை மறுத்தார்கள் ...???
உன் தொலைபேசியில் ....
இருந்து வரும் கண்ணீர் ...
இதயத்தையே நனைக்கிறது ..!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
இப்போதுதான் ....
புரிகிறது -நீ 
என் இதயத்தை ....
கண்ணாடியாய் .....
பார்த்திருக்கிறாய் ......!!!

அதுதான் அப்பப்போ ....
வந்து உன்னை அழகுபடுத்த .....
என்னை பயன்படுத்தி .....
இருக்கிறாய் .........!!!

நான் என்னுள் நீ 
காதல் செய்கிறாய் .....
என்று கற்பனையில் .....
வாழ்ந்துவிட்டேன் ......!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
என்னுயிரே 
உனக்கேன் இவ்வளவு சோகம் ...?
நான் இருக்கையில் உனக்கேன் ....
சோக கவிதை என்று .....
எப்போதாவது கேட்டிருக்கிறாயா....?

என் உள்ளத்தில் .....
காதல் சோலைகளைவிட ...
சோகங்களே அதிகம் ...
சோகங்களை மறைக்கலாம்.... 
மறக்கமுடியாது ...!!!

சோகங்களை...... 
மறைக்கத்தான் சோகக்கவிதைகள்...
எழுதுகிறேன் கண்ணே.....
சோலையில் நின்றவனைவிட ..
சோகத்தில் நின்றவன் தான் ..
சாதித்துள்ளான் ....!!!
நான் சோகத்தில் நிற்கிறேன் ....!!!
கவிப்புயல் இனியவன்
எரிவேன் ...
தெரிந்துகொண்டு...
விட்டில் பூச்சி ......
விளக்கில் விழுந்து ...
எரிகிறது ......
எரிவதில்....... 
அது சுகம் காணுகிறது.........!!!

நானும் உன்னில் .....
வலியை எதிர்பார்த்தே ...
காதலித்தேன்.... 
உன்னால் வரும் .....
வலியும் சுகம்தான்.......!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நீ என் இதயத்துக்குள் ....
புகுந்தபோதும் ....
விலகிய போதும் ...
மெதுவாக வந்து .......
மெதுவாக விலகிவிட்டாயே ....
எந்த வித வலியுமில்லாமல்....
எங்கு கற்றுக்கொண்டாய் ......
இந்த கலையை ..?

&
கவிப்புயல் இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
உன் .....
மடியில் உறங்க ....
அனுமதி கொடு ....
இதயத்தின் சுமையை ....
உன்னோடு பகிர்ந்து ....
கொள்கிறேன் ......
எனக்காக நீ .....
அழுதுவிடாதே.......
அழுவதற்காக......
பிறந்தவன் நானாகவே ....
இருந்து விடுகிறேன் .......!!!

&
கவிப்புயல் இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
என் ........
காதலின் வலிமை ......
உனக்கு  புரியவில்லை .....
என்றோ  என் காதலை .....
நினைத்து பார்ப்பாய் ......
அப்போது புரியும் என்னை .....
இழந்ததால் வலி ...........!!!

உன்னை காணும் ....
போது வேண்டுமென்றே.....
இதயத்தை கல் ஆக்கி விடுகிறேன் .....
உள்ளே இதயம் நொறுங்கும் ....
சத்தம் யாருக்கு புரியும் .....?

 &
கவிப்புயல் இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 181
கவிப்புயல் இனியவன்
எனக்காக கவிதை எழுது....
என்று அடம் பிடிகிறாய்.....
எழுதிய கவிதையில் நீ
இல்லாத ஒரு கவிதையை....
சொல் பார்க்கலாம்........?

போராட்டம் தான் காதல்......
எனக்கு உன்னை பார்க்காத....
பொழுதெல்லாம் போர்க்களம்....
ஆகுறது மனசு.........!!!

உன்னை சந்திக்கும்.....
நேரமெல்லாம் உன் அருகில் ....
இருக்கவே தோன்றுகிறது......
காதலில் தவிர்ப்பும் அழகு......!!!

&
கவிப்புயல் இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

Comments

வருட பிரபல கவிதை

தேனிலும் இனியது காதலே 23

89-100) வலிக்கும் இதயம்

ஐந்து வரி கவிதைகள் 17

முள்ளில் மலரும் பூக்கள்(60)

முள்ளில் மலரும் பூக்கள்(62)

பஞ்ச வர்ண கவிதைகள்

7- 13) வலிக்கும் இதயம்

உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள்