Skip to main content

67-78) வலிக்கும் இதயம்

 

கவிப்புயல் இனியவன்
கைபேசியை பார்த்து பார்த்து....
கழைத்து விட்டேன் -ஒரு சிறு ....
செய்தியை பிறக்கும் வருடத்தில் ...
வாழ்த்தி அனுப்புவாய் என்று ......!!!

வாழ்கை வாழ்வதற்கே .....
அதை அன்பாய் வாழ்ந்து ....
முடிப்பதே வாழ்கை ....
கோபத்தையும் கர்வத்தையும் ....
வளர்க்காதே - வா அன்பே .....
புதிய ஆண்டில் ....
புது வாழ்வு வாழ்வோம் ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நீ என்னோடு ....
கோபமாய் இருக்கிறாய் ....
நன்கு தெரிகிறது ...
என்னோடு பேசும்போதே ...
பூமரத்தின் இலையை ....
பித்துகொண்டு இருகிறாய்
பாவம் அதை நிறுத்து ....
அது என்னசெய்தது உனக்கு....?

உன் கோபத்தால் ....
நான் உயிரோடு இருந்தும் ....
என் மரண ஊர்வலத்தை ....
பார்த்துகொண்டிருகிறாய்....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
உன்னை பிரிந்த பின் 
என் இறந்த உடலை ....
நானே பார்கிறேன் ....!!!

என் 
இறந்த உடலுக்கு அருகில்  
நீயும் நிற்பதை நான் 
பார்க்கிறேன் .....!!!

நான் இறந்தபின் என் ...
உடலை பார்ப்பதும் ....
நீ அருகில் இருப்பதையும் 
பார்க்கும் முதல் மனிதன் ....
நான் தான் .....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
உன்னையும் ....
உன் வலிகளையும்......
எவ்வளவேனும் நான் ...
சுமப்பேன் ....
என்னை உன் விழிகளில் .....
சுமந்து விடு ....!!!

மற்ந்து விடு என்று ....
ஒருமுறை சொல் .....
என்னை மறந்து விடுகிறேன் ....
என் உறவுகளை மறந்து ....
விடுகிறேன் ......!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
உன்னோடு 
இணைந்து திரிந்த நான்..... 
தனியாக போகிறேன்..
எப்போதோ தொலைத்த ஒன்றை
தேடிக்கொண்டு.....!!!

வளையல் சத்தம் கேட்கிறது 
கொலுசின் ஓசை கேட்கிறது 
சிரிப்பொலிகள் கேட்கிறது 
எல்லாம் பிரம்மையில் ....!!!

தேடித்தேடி 
அலைகின்றேன்
தேடியது கிட்டவில்லை
கிடைத்தது ஒன்று ....
எனக்கு பிடிக்கவில்லை ...!!!

வாழ்க்கையெனும்....
மனச்சோலையில்.... 
வாழ்ந்து கொண்டுடிருக்கிறேன்....
உயிரின் வலிஅறியவில்லை.....
உறங்குகின்றேன் காதலியே.....
உன் நினைவோடு.....!!!
கவிப்புயல் இனியவன்
காதல்
இரு உள்ளங்களின்
ஏக்கம் ....!!!

ஏக்கத்தை புரிந்தவர்கள் 
வெல்லுகிறார்கள் ..
ஏக்கத்தை ...
தொலைத்தவர்கள் ...
தோற்கிறார்கள் ...!!!
கவிப்புயல் இனியவன்
என்னை விட்டுசென்ற...
அவளை இன்னும் காதலித்து ...
கொண்டுஇருக்கிறேன்....!!!

அவளை 
மறக்க முடியாமல் இல்லை.... 
இன்னொருத்தியை 
நினைக்கவும் முடியவில்லை ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
அன்பால் 
அடிமையாகினேன் ...
என்று தப்பாய் ....
நினைத்துவிட்டேன் ....!!!

இப்போதான் ....
புரிந்தது என்னை ...
அடிமையாக்கவே ....
அன்பு வைத்திருகிறாய் ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
வேண்டாம் என்னை ....
விட்டு விடு ....
காதலித்தது போதும் .....
விலக்கிவிடு ....!!!

தனியாக..... 
இருக்க என்னை.... 
அனுமதித்துவிடு ..
துணை வேண்டாம் ....
அன்பே என்னை ....
மறந்துவிடு ....!!!

பிணமாக 
நடக்க ஆசைப்படுகிறேன் 
உயிர் வேண்டாம் ....
உயிரே என்னை ....
மறந்துவிடு ....!!!

இத்தனையும் சொல்ல ....
துடிக்கிறது மனசு 
முடியவில்லை ....
உயிரே மன்னித்துவிடு ...!!!

இருக்கும் 
ஒவ்வொரு நிமிடமும் ...
ஒவ்வொரு மூச்சும் ...
அன்பே உனக்காகத்தான் ....
என்பதை மறந்துவிடாதே ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நிச்சயம் ,,,,
நீ எனக்கு சொந்தமில்லை ...
என்றோ அறிந்து விட்டேன் ....
இருந்தும் .....!!!

இதயம்  ஏற்க தயங்குகிறது ....
உன்னையே  நினைத்து ...
உனக்கே துடித்த இதயம் ....!!!

எப்படி ....?
உன்னைப்போல் திடீரென ....
மறக்கும் .....?

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
ஆரம்பத்தில் ....
பார்வையால் கொன்றாய் ....
இடையில் ....
பாஷையால் கொன்றாய் ....
முடிவில் ....
பாவையே உன்னால் பட்ட ...
மரமாகிவிட்டேன் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
காதலில்  ....
எல்லாவற்றையும் ...
பெற்று ....
எல்லாவற்றையும் ....
இழக்கிறோம் .....!!!

சேர்ந்து வாழ ....
காதல் செய்து ....
தனித்தனியாய் ...
பிரிந்திருக்கிறோம்

Comments

வருட பிரபல கவிதை

தேனிலும் இனியது காதலே 23

89-100) வலிக்கும் இதயம்

ஐந்து வரி கவிதைகள் 17

முள்ளில் மலரும் பூக்கள்(60)

முள்ளில் மலரும் பூக்கள்(62)

பஞ்ச வர்ண கவிதைகள்

7- 13) வலிக்கும் இதயம்

உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள்