Skip to main content

முள்ளில் மலர்ந்த பூக்கள் (25)

 

கவிப்புயல் இனியவன்
ஆயிரம் முறை ....
திரும்பி பார்த்தவள் ...
இப்போ ....
குனிந்தபடி செல்கிறாள்....!!!

பூவை கொடுத்து ...
பூவாக வர்ணித்து ....
பூவையை காதலித்தேன் ....
உதிர்ந்து கொண்டிருக்கிறாள் ....!!!

என் கவிதையை ....
எல்லோரும் விரும்பவைத்த ....
உன் வலிகளுக்கு நன்றி ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
K இ K A 00 F
கவிப்புயல் இனியவன்
குங்குமம் போல் ....
சிவந்த முகத்துடன் ....
சிரித்து பேசியவள் ....
குங்கும பொட்டோடு ...
குனிந்து நிற்கிறாள் ....!!!

கொன்றால் பாவம் ....
அப்போ என்னை ...
காதலால் கொன்றவள் ...
நீயும் பாவி .....!!!

உன் ..
காதல் தோட்டத்தில் ...
என்னை சருகாக ....
ஏற்றுக்கொள் ....
உரமாக என் காதலை ....
வளர்க்கிறேன் ....!!!
கவிப்புயல் இனியவன்
உன் 
நினைவு வலையால் ...
சிக்கி தவிக்கும் நான் ...
பூச்சி -நீ சிலந்தி 
கௌவ்வி எடுத்துவிடு ....!!!

கடலோர பாதம் ...
கரைந்ததுபோல் ...
நம் காதலும் ...
கரைந்து விட்டது ...!!!

நீ 
எனக்கு பாசக்கயிறா ....?
பாசாங்குவேஷக்கயிறா....?

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
K இ K A 00 H 
1008
கவிப்புயல் இனியவன்
காதலுக்கு கண் ...
இல்லை என்பார்கள் ....
உனக்கு இதயமே ...
இல்லையே....!!!

என்னை விட்டு போ ....
கவலையில்லை ...
என்னையும் கூட்டி ...
செல்வதில் உனக்கென்ன ...
கவலை ....?

நீ 
என்னருகில் இல்லாத ....
போதெலாம் -நான் 
ஓடாத மணிக்கூடு ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
K இ K A 00 I
1009
கவிப்புயல் இனியவன்
உன் சிரிப்பு ...
மற்றவர்களுக்கு ...
சிதறும் சில்லறை ...
எனக்கு நெற்றி 
பொட்டுக்காசு.....!!!

காதல் 
இழப்பை கொண்டுவரும் ....
உன்னையே இழக்கவைக்கும் ...
என்று நினைக்கவில்லை ....!!!

என்றோ ...
ஒருநாள் நீ என்னை ....
திரும்பி பார்ப்பாய் ....
அப்போது நான் ....
மாலையுடன் இருப்பேன் ...
உயிரோடு இருக்கமாட்டேன் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
K இ K  A 0AO
1010
கவிப்புயல் இனியவன்
காதலித்தால் ....
மனிதனாகலாம் ....
அவள் காதலோடு ....
இருந்தால் ....!!!

நானும் ......
பாவத்தை ....
சுமக்கும் சிலுவை ....
நாதன் தான் .....
அவள் வலியை ....
சுமக்கிறேன் .....!!!

அவளிடம் ....
காதல் நிறைந்து ....
இருக்கிறது ...
அவள் வீட்டில் ....
காசு நிறைந்திருகிறது ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
K இ K - A 0AA
1011
கவிப்புயல் இனியவன்
அடுத்த ....
ஜென்மத்தில் ....
காதலிபப்தற்காக ....
இந்த ஜென்மத்தில் ....
வலிகளை தருகிறாள்....!!!

கண்களால் சித்திரம் ....
வரைந்தவள் .....
கண்ணீரால் சித்திரம் ....
வரைய வைக்கிறாள் ....!!!

காதலுக்காக ...
நமக்குள்  நாமே ....
காதல் செய்வோம் ....
காதல் என்றாலும் ....
இன்புறட்டும் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
K இ K - A 0AB
1012
கவிப்புயல் இனியவன்
என் ......
கவிதைகளை ...
வலிமையாக்க -நீ 
இன்னும் வலிகளை....
தந்துவிடு .....!!!

உன்னை 
காதலிப்பதும் .....
மணல் வீடு கட்டுவதும் .....
ஒன்றுதான் .....!!!

யார் சொன்னது ...
காதலுக்கு கண் இல்லை ...
என்று - அப்போ கண்ணீர் ....
எப்படி வருகிறது ....?

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
K இ K - A 0AC
1013
கவிப்புயல் இனியவன்
நான் காதலில் ...
கனவு காண்கிறேன் ...
நீ தூக்கத்தில் 
கனவு காண்கிறாய் ....!!!

ஈசலின் வாழ்வும் ....
ஒருசில மணிநேரம் ...
காதலின் இன்பமும் ....
ஒருசில மணிநேரம் ....!!!

பகலின் முடிவு இருள் ....
காதல் இதயத்தின் அருள் ...
காதலின் முடிவு இருள் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
K இ K - A 0AD
1014
கவிப்புயல் இனியவன்
இறந்த காலம் சில ...
வேளை இனிமையாகும் .
இறந்த காதலும் சில ...
வேளை இனிமையாகும் ....!!!

தண்ணீர் ஊற்றி ....
செடியை வளர்க்கிறேன்.
கண்ணீர் விட்டு ....
காதலை  வளர்க்கிறேன்....!!!

நீ அதிசயப்பிறவு ....
காதலின் தொடக்கத்திலும் ...
இறுதியிலும் சிரித்த ...
முகத்தோடு செல்கிறாய் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
K இ K - A 0AE
1015

Comments

வருட பிரபல கவிதை

தேனிலும் இனியது காதலே 23

89-100) வலிக்கும் இதயம்

ஐந்து வரி கவிதைகள் 17

முள்ளில் மலரும் பூக்கள்(60)

முள்ளில் மலரும் பூக்கள்(62)

பஞ்ச வர்ண கவிதைகள்

7- 13) வலிக்கும் இதயம்

உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள்