Skip to main content

81-87) வலிக்கும் இதயம்

 புரியாமல் பார்த்தாய்

வியந்து கொண்டேன் 

தெரிந்து பார்த்தாய்
புரிந்து கொண்டேன் 

அன்பு கொண்டு பார்த்தாய்
காதல் கொண்டேன் 

ஏக்கத்துடன் பார்க்கிறாய்
என்னை இழந்தேன் 

வெறுப்புடன் பார்க்கிறாய்
விலகிக்கொண்டேன் 

காதல் பார்வை ....
சாதாரணமானதா ...?
கவிப்புயல் இனியவன்
கிழிந்த‌ காற்சட்டையுடன் ...
திரிந்த‌ அந்த‌ நாட்களை ,,
மீட்டுப்பார்க்கிறேன்...!!!

மின்மினி பூச்சியை பிடித்து ..
தீப்பெட்டிக்குள் போட்டு...
அது மூச்சு போக‌ ஒரு ...
ஓட்டை போட்டு வைத்தேன் ...
எனக்கருகே வைத்தும் தூங்கினேன்...
எழுந்து பார்த்தேன் போட்ட‌ ஓட்டையால் ..
ஓடிப்போனது மின்மினிபூச்சி ...!!!

அழுதேன் தேடினேன் துடித்தேன் ...
மக்கு மண்டைக்கு விளங்கவில்லை...
மின்மினி கற்று தந்தது உன‌க்கு...
நீயோ சுதந்திரமில்லாத‌ நாட்டில் ...
வாழுகிறாய் நான் ஏன்..???
அப்படி வாழவேண்டும் ...!!!
கவிப்புயல் இனியவன்
இறைவா ...!!!
என் இதயத்தை ஏன்..?
மென்மையாக படைத்தாய்...
ஏளனம் செய்கிறார்கள்...
ஏமாற்றுகிறார்கள்.....!!!

கையால் ஆகாதவன் என்கிறார்கள்
கோழை என்கிறார்கள்
நான் மென்மையான
இதயத்தில் பிறந்தது
குற்றமா ..?-இல்லை
மற்றவர்கள் -வன் இதயத்தை
கொண்டவர்களா ...?

பொறுத்த மில்லாத -என்
இதயத்தை மாற்று
நானும் சமூகத்தில்
இணைந்து வாழ்வதற்கு ....!!!

+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
தேடினேன்
தொலைந்து விட்ட இதயத்தைத்
தேடினேன்!

மேகத்தைத்தூது விட்டு
நிலவினில் தேடினேன்!
அலையினைத்தூது விட்டு
கடலினில் தேடினேன்!

தென்றலைத்தூது விட்டு
காற்றினில் தேடினேன்!

கிடைத்திடாக் கவலையால்
தரையினில் தேடினேன்!

அவள் வீட்டு
வாசல் முன் கிடந்தது!

வீசியெறிந்தக்குப்பையாய்
என் இதயம்........
கவிப்புயல் இனியவன்
என் 
ஆனந்த காற்றாய் ....
ஆரோக்கிய காற்றாய் ....
என்னோடு இருந்தவளே ....!!!

சிரிக்கும்போது ....
உன்னோடு சத்தமாய் ....
சிரித்தேன் ....
அழும்போது தனியே ....
உனக்கு கூட தெரியாமல் ....
அழுகிறேன் ....
என் அழுகையால்....
உன்கண்கள் கலங்கிட கூடாது ....!!!

+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
ஏமாறமாட்டேன் ....
எப்படி ஏமாற்றுவது ...
என்பதை உன்னிடம் ....
கற்றுகொண்டேன் ....
இனியாரும் என்னை ....
ஏமாற்ற முடியாது ....!!!

காதலிக்க மாட்டேன்....
யாரையும் காதலிக்க மாட்டேன் ....
இதயமில்லாத உன்னைப்போல் ...
யாரையும் காதலிக்க மாட்டேன் ...!!!

+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
உன்னை நினைத்து 
சுட்டுக்கொண்ட காயங்கள் 
நீ என்னிடம் விட்டுச்சென்ற 
நினைவுகள் ஏற்படுத்திய
காயங்களின் வலியே அதிகம்…!!!

தரையில் விழுந்த மீனும் 
தண்ணீரில் தாழ்ந்த மானும்
துடிக்கும் துடிப்பை உணர்ந்து 
கொள்கிறது உன்னை
தவறவிட்ட என் இதயம்….!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
விஷத்தை அருந்தியவன் 
அடுத்த நொடியில் 
இறந்து விடுகிறான் ...!!!

காதலில் தோற்றவன் ....
உயிரோடு இருந்தும் ...
இறந்தவன் தான் ....!!!

காதலில் வென்றவன் ...
கொஞ்சம் கொஞ்சமாய் ...
செத்துகொண்டிருப்பவன்

Comments

வருட பிரபல கவிதை

தேனிலும் இனியது காதலே 23

89-100) வலிக்கும் இதயம்

ஐந்து வரி கவிதைகள் 17

முள்ளில் மலரும் பூக்கள்(60)

முள்ளில் மலரும் பூக்கள்(62)

பஞ்ச வர்ண கவிதைகள்

7- 13) வலிக்கும் இதயம்

உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள்